விசுவமடு – சாலை விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு.!
முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு புளியடி பகுதியில் சாலையை கடந்துச் செல்ல முயன்ற குடும்பப் பெண் ஒருவரை இருசக்கர வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.அதிக வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை கடந்துச் சென்ற பெண்ணை மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் கடுமையாகக் காயமடைந்து தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் விசுவமடு புளியடி பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயாரான 53 வயதுடைய என். சுகந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது