புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மெசிடோ நிறுவனத்தினால் நிலக்கடலை விதைகள் வழங்கி வைப்பு.!
மன்னார் மாவட்டம் பகுதியில் அண்மையில் வீசிய புயல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த 30 விவசாயிகளுக்கு மேட்டு நிலப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வு இன்று (25) மெசிடோ நிறுவனம் பணிப்பாளர் யாட்சன் பிகிறாடோ தலைமையில், மன்னார் பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனை பயிற்சி மண்டபத்தில் நடைபெற்றது.
விதைகள் வழங்குவதற்கு முன்னதாக, விவசாயிகளுக்கு மேட்டு நிலப் பயிர்ச் செய்கை தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வழங்கும் நோக்கில் விசேட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அந்தப் பயிற்சியை ஜெஸ்மன் மார்க் வழங்கினார்.பயிற்சியின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட 30 விவசாயிகளுக்கும் நிலக்கடலை விதைகள் கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்துகொண்டு விதைகளைவழங்கினர்.புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீளமைக்க இத்தகைய உதவிகள் முக்கிய பங்கு வகிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.