உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நயினாதீவு விகாரை தொடர்பாக தேரரின் கருத்து – சமூக வலைத்தளங்களில் விவாதம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

கலகம குசலதம்ம தேரர் அவர்கள், நயினாதீவு நாகதீப விகாரை விகாராதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கலாம் என கருத்து வெளியிட்டுள்ளார்.இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், குறித்த விகாராதிபதிக்கு யாழ்ப்பாணம் மக்களால் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கப்படாதது தொடர்பிலும் கேள்வி எழுப்பினார்.


யாழ்ப்பாண நகரில் அமைந்திருந்த நாக விகாரையின் விகாராதிபதி விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும், ஆனால் நயினாதீவு விகாரையின் விகாராதிபதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இன்றைய நிலவரத்தில் சில தரப்புகள் திஸ்ஸ விகாரை தங்களுக்கு உரியது எனக் கூறுவதாகவும், விகாரைக்கு ஒரு ஏக்கர் காணி மட்டுமே உரியது என தெரிவிக்கப்பட்டாலும், சுமார் 14 ஏக்கர் காணி பொதுமக்களுக்கு உரியது என கூறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்த விடயங்களை கவனத்தில் கொள்ளும்போது பெரும் சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0