கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா: தமிழகத்திலிருந்து யாத்திரிகர்கள் வருகை.!
வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் வருடாந்த திருவிழாவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்து 996 யாத்திரிகர்கள் நாளைமறுதினம் வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.ஆலயத்தின் ஆண்டு திருவிழா நாளைமறுதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
இந்த ஆன்மீக நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு தமிழகத்திலிருந்து பெருமளவிலான பக்தர்கள் கடல் மார்க்கமாக பயணம் மேற்கொள்கின்றனர்.அதன்படி, 92 விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 589 பேரும், 26 நாட்டுப்படகுகளில் 307 பேரும் பயணிக்கவுள்ளனர்.யாத்திரிகர்கள் இராமேஸ்வரத்தில் தேவையான சோதனைகள் மற்றும் அனுமதி நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர் கச்சதீவு நோக்கிப் புறப்படவுள்ளனர்.
இதற்காக அவர்கள் பயணிக்கும் அனைத்து படகுகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
யாத்திரிகர்களுக்கான குடிநீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.