நிலக்கரி ஊழல் மற்றும் அவதூறு பரப்பல்களுக்கு சம்பிக்க ரணவக்க பதிலடி.!
ஐக்கிய குடியரசு முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு, கட்சித் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இன்று நடைபெற்றது.இச்சந்திப்பில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலக்கரி கொள்வனவு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய தற்போதைய நிலைமை குறித்து விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.
குறித்த கொள்வனவு இடம்பெற்ற விதம், அதன் பின்னணியில் உள்ள செயற்பாடுகள் மற்றும் அதனைச் சூழ்ந்த சர்ச்சைகள் குறித்து அவர் விளக்கமளித்தார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறு பிரசாரங்களுக்கு தகுந்த ஆதாரங்களுடன் பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.
இந்த ஊழல் தொடர்பான செயல்முறையால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், தவறானதகவல்கள் மூலம் மக்கள் திசைதிருப்பப்படுவதாக எழும் கவலைகள் குறித்தும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.இவ்விவகாரம் தொடர்பான உண்மைகள் மக்களிடம் தெளிவாக கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.