உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி – அரசாங்கம் உறுதி.!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதியை பெற்றுக் கொடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், தாக்குதலைத் தடுக்கத் தவறியவர்கள், தாக்குதலை வழிநடத்தியவர்கள் மற்றும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஆகிய பல்வேறு விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், சில சந்தேகநபர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களம் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னதாக முழுமையான நீதியை வழங்க இயலாவிட்டாலும், விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் உறுதியளித்தார்.கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.