உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு வழமைக்கு திரும்பியது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாடு தற்போது நீங்கியுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை முதல் நகரின் பல பகுதிகளுக்கு எரிவாயு ஏற்றிய வாகனங்கள் வருகை தந்துள்ளன.

இதன் மூலம் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இன்றி எளிதாக எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதை காண முடிந்தது.நேற்று வரை எரிவாயு கிடைக்காமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாக கூறிய பொதுமக்கள், தற்போது தடையின்றி விநியோகம் நடைபெறுவது தங்களுக்கு நிம்மதியளிப்பதாக தெரிவித்துள்ளனர்.


தட்டுப்பாட்டை நீக்கி விநியோகத்தைசீரமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பலனளித்துள்ளதால், உணவகங்களும் குடும்பங்களும் தமது அன்றாட சமையல் பணிகளை மீண்டும் தடையின்றி ஆரம்பித்துள்ளன.தற்போதைய நிலையில் சந்தையில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் இருப்பதாகவும், விநியோக அமைப்பு சீராக செயல்பட்டு வருவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0