தற்போதைய அரசாங்கம் ஊழலில் ஈடுபடுகிறது – திலித் ஜயவீர குற்றச்சாட்டு.!
இலங்கை வரலாற்றில் இதுவரை உருவான அரசாங்கங்களில் மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சியாக தற்போதைய அரசாங்கம் விளங்குவதாக சர்வஜன அதிகாரம் அமைப்பின் தலைவர் திலித் ஜயவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கம் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முறைகேடான வர்த்தகர்களை ஆதரித்து வருவதாகவும், மிகுந்த பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் இதுவரை இல்லாத அளவிலான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்று வருவதாகவும், இவை குறித்து தாம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.ஊழல் நிறைந்த கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் கொள்கையாக மாறியுள்ளதாகவும், அது அவர்களின் ஆழ்மனப்பாங்கில் பதிந்திருப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
“ஏழை எளிய மக்களின் பிரதிநிதிகள்எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது அதற்கு நேர்மாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.குறிப்பாக நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலக்கரி விவகாரத்தின் தாக்கம் காரணமாக, எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டின் ஏழை மக்கள் கூட இதனால் பாதிக்கப்படக்கூடும் என அவர் எச்சரித்தார்.
குறைந்த வருமானம் பெறும் மற்றும் வறிய மக்கள் மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல வழிகளில் கூடுதல் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.கிராமப்புறங்களில் கடினமான சூழ்நிலைகளில் வாழும் மக்கள்மீது இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது குறித்து தாம் கவலைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.