தேசிய மின்சக்தி கொள்கை மீண்டும் அமைச்சரவையில் ஒத்திவைப்பு.!
தேசிய மின்சக்தி கொள்கை இம்முறையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும், அதனைச் சார்ந்த அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தேசிய மின்சக்தி கொள்கைக்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறுவது மேலும் தாமதமடைந்துள்ளது.
இதனால் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமடையும் நிலையில், அந்தச் சபை கலைக்கப்படும் திகதியை அறிவிப்பதும் பிற்போடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் ஐந்து கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டதில் நான்கு கட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
தேசிய மின்சக்தி கொள்கை தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ள போதிலும், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த பின்னரே சபை கலைக்கப்படும் திகதி அறிவிக்கப்படவுள்ளது.இதற்கிடையில், குறித்த நடவடிக்கைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பெப்ரவரி 28ஆம் திகதி வெளியிடப்படும் என இலங்கை மின்சார சபை முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.