மயானத்தில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு.!
வவுனியா – ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அப்பகுதியில் சடலம் ஒன்று காணப்படுகின்றதாக இன்று காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுமார் நாற்பது முதல் நாற்பத்தைந்து வயதுக்கிடைப்பட்ட ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை அவர் அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், அவரது உடலின் ஒரு பகுதி தீயினால் எரிந்துள்ளதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என கூறப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.