சரிகமப நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பெற்ற விநாயகபுரம் மண்ணின் மைந்தன் சு.சபேசன் கௌரவிப்பு.!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கிராமத்தின் மைந்தன் zee tamil சரிகமப நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பெற்ற திரு.சு.சபேசன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் சமூகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் திரு.தம்பிராசா தவராசா அவர்களின் தலைமையில் பாடசாலை காலை ஒன்று கூடல் வளாகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சபேசன் அவர்கள் பூமாலை மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை சமூகத்தினால் நினைவுச் சின்னம் ஒன்றும் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இவ் நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், சபேசன் அவர்களினால் கல்வி சார் பாடல் ஒன்று மாணவர்களுக்காக பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

