உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

மகளிர் பிரீமியர் லீக் தொடரிற்கான வீராங்கனைகளின் ஏலம் ஒக்டோபரில் இடம்பெறும்

விளையாட்டுச் செய்திகள் 6 மணி நேரம் முன்
42 பார்வைகள்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 5 ஆவது பருவத்துக்கான வீராங்கனைகள் ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி கொச்சியில் நடைபெறும் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல், போட்டித் தொடரில் பங்கேற்கும் ஐந்து அணிகளுக்கும் இன்று (16) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஊடக வெளியீட்டையும் வெளியிட்டுள்ளது.

அத்துடன், 2027 ஆம் ஆண்டுக்கான WPL தொடர் ஜனவரி 14 முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பிசிசிஐ திகதிகளை உறுதி செய்துள்ளது.

இதேவேளை, அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீராங்கனைகளின் பட்டியலை தீர்மானிக்க ஐந்து அணிகளுக்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 6 வெளிநாட்டு வீராங்கனைகள் உட்பட 18 வீராங்கனைகள் வரை இடம்பெற முடியும். தற்போதைய சுழற்சிக்கான ஒரு அணியின் மொத்த கையிருப்புதொகை 15 கோடி இந்திய ரூபாயாகும்.

2027 மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும், மும்பை மற்றும் வடோதரா ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், புதிய மைதானம் நிர்மாணிக்கப்பட்டு வரும் வாரணாசியிலும் சில போட்டிகளை நடத்த முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன.

இருப்பினும், அந்த மைதானத்தில் உள்நாட்டுப் போட்டிகளை நடத்தி சோதித்த பிறகே மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளை நடத்த முடியும் என்பதால், இப்போதைக்கு அங்கு போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய போட்டிகளுக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான மகளிர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் ஆசியக்…

25 0 0
விளையாட்டுச் செய்திகள்

2030 உலகக் கிண்ண இறுதிப்போட்டி: மொரோக்கோவின் உரிமைக்கோரலுக்கு ஃபீஃபா மறுப்பு

2030 ஆம் ஆண்டு ஃபீஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி மொரோக்கோவில் நடைபெறும் என அந்தநாட்டு கால்பந்து சம்மேளனத் தலைவர் கூறிய கருத்தை உலகக்…

30 0 0
விளையாட்டுச் செய்திகள்

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம்!

ஆசியக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியின் போது மைதானத்தில் முறையற்ற செய்கை (gesturing) செய்ததற்காக பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவர் பாத்திமா சனா மீது…

162 0 0
விளையாட்டுச் செய்திகள்

CPL வரலாற்றில் தசுன் ஷானக்க புதிய சாதனை

CPL வரலாற்றிலேயே அதிவேக சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார் இலங்கை அணி வீரர் தசுன் ஷானக்க. செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கிய ஷானகா,…

86 0 0