பாதாள உலகக் குரோதம்; பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!
பொரலஸ்கமுவை, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற து***க்கிச் சூ**ல் நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்களை பொரலஸ்கமுவை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.
பாதாள உலகக் குழு உறுப்பினராகக் கருதப்படும் ‘தெஹிவளை சாண்டோ’ என்பவரால், ‘கொஸ்மல்லி’ என்பவரின் காசாளரை இலக்கு வைத்தே இந்த து***க்கிச் சூ** நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், து**கிச் சூ** நடத்தியவர்களின் இலக்கு தவறியதால், குறித்த காசாளரின் தந்தைக்கு துப்**ச் சூ** பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சுனில் பெர்னாண்டோ எனப்படும் 74 வயதுடைய முதியவராவார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், கைத்துப்*** மூலம் இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இனங்கண்டு கைது செய்வதற்காக பொரலஸ்கமுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் விசேட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்