உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
74 பார்வைகள்

கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா மாநகர சபை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்வாண்டு விழாவின் முக்கிய அம்சமாக, மாநகர சபை வரலாற்றில் முதன்முறையாக 12 நாட்கள் தொடர்ச்சியாக ஸுப்ஹான மௌலித் ஓதுதல் நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டமை மற்றும் பல்வேறு கஸீதா குழுக்களின் நபி புகழ் பாடல்கள் இந்த நிகழ்வுக்குச் சிறப்பைச் சேர்த்தன.

கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கேலி பால்தசார் மற்றும் பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு மாநகர சபை உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் மீலாதுன் நபி விழா, தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

132 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

115 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

112 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

120 0 0