அடிக்கடி ஏற்படும் மின்தடை; மக்கள் விடுத்துள்ள கோரிக்கை.!
கடந்த சில நாட்களாக அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மின் பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கபட்டு வருகின்றனர்.
அத்துடன் தற்போது கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்று வருவதால் பரீட்சாத்திகள் பாரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து இவ்வாறான நிலை காணப்படுவதால் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிப்புக்குள்ளாகி வரும் அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.