உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

நைஜரில் கலவரம் : கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவிப்பு!

உலக செய்திகள் 23 நிமிடங்கள் முன்
31 பார்வைகள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் நியாமி நகரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் அரசுத் தளங்களுக்கு அருகில் பல மணி நேரங்களாகத் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடுகளும் வெடிச்சத்தங்களும் கேட்டதைத் தொடர்ந்து அங்கு நடந்த கிளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக ராணுவத் தலைமை அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த சனிக்கிழியன்று தியோரி ஹமானி வானூர்தி நிலையத்தில் உள்ள ராணுவத் தளம் மீது கிளர்ச்சிப் படையினர் முதன்முதலில் தாக்குதல் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து அரசு தொலைக்காட்சி நிலையமும் ஜனாதிபதி மாளிகையும் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளன.

எனினும், பாதுகாப்புப் படையினர் படிப்படியாக நிலைமையை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்ததாகவும் கிளர்ச்சியாளர் படையைச் சேர்ந்த பலரும் கொல்லப்பட்டோ அல்லது கைது செய்யப்பட்டனர் என்று அரசத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய நைஜரின் ராணுவத் தலைமை நாட்டில் அமைதியை நிலைநிறுத்துவதில் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்த கிளர்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் ராணுவ ஆட்சியாளரும் ஜனாதிபதியுமான ஜெனரல் அப்துரஹ்மான் சியானி தனது நாட்டின் போக்கை மேற்கத்திய நாடுகளிடமிருந்தும் குறிப்பாக நாட்டின் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான பிரான்சிடமிருந்தும் விலக்கிக் கொண்டார்.

ஆயுதக் குழுக்களிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அவர் ரஷ்யாவுடன் நெருங்கிய பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.

இருப்பினும் அல்-கொ மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்துவதைத் தடுத்து நிறுத்த இது உதவவில்லை.

இந்தநிலையிலேயே தற்போது அங்கு கிளர்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கிளர்ச்சியின் பின்னணியில் தலைநகர் நியாமிக்கு வெளியேயுள்ள பகுதிகளைச் சேர்ந்த குறிப்பாக நைஜரின் தென்மேற்குப் பகுதிகளைச் சேர்ந்த இளம் வீரர்களே இந்த இருந்ததாகத் தெரிய வருகிறது.

கிளர்ச்சியாளர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் அதற்குத் தலைமை தாங்கியது யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

ஆனால் முன்களப் படையினர் இதில் ஈடுபட்டிருப்பது ராணுவத்திற்குள் அதிகரித்து வரும் விரக்தியைக் குறிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு!

உக்ரைனின் கீவ் (Kyvia) பிராந்தியத்திலுள்ள இராணுவ வெடிபொருள் சேமிப்புக் கிடங்கு மீது ரஷ்யா நடத்திய மிக தீவிரமான வான் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக…

54 0 0
உலக செய்திகள்

சீன அதிகாரிகள் உரிய தகவல்களைத் தரவில்லை – நேபாளம் குற்றச்சாட்டு!

நேபாளம் மற்றும் சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த மே 27 அன்று காத்மாண்டுவில் சந்தித்து பனிப்பாறை அபாயங்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு குறித்து விவாதித்துள்ளனர். எனினும் பனிப்பாறைகளின்…

34 0 0
உலக செய்திகள்

நேபாள வெள்ளப் பேரழிவு – உயிரிழப்பு 700 ஐ தாண்டியது

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இதன்படி, குறித்த பேரழிவில் நேபாளத்தில் 700-க்கும் மேற்பட்டோரும், சீனாவில் 16-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.…

64 0 0
உலக செய்திகள்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

இமயமலைத் தொடரில் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்ததால் நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த…

54 0 0