தமிழக அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம் – காங்கிரஸ் எச்சரிக்கை!
2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என தமிழக அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் இதற்கு உடன்படாவிட்டால் அல்லது ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தமிழக அரசாங்கத்தில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலகி விடுவோம் என்று அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட அமைச்சர் பதவியை விட காங்கிரஸ் கட்சியும், அதன் கொள்கைகளும், ராகுல் காந்தியும் தான் தங்களுக்கு முக்கியம் என்றும், கட்சிக்காக எந்தக் கணத்திலும் பதவியைத் துறக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைத்துள்ள நிலையில், எதிர்காலப் பிரதமர் விஜய் தான் என்று அந்தக் கட்சியின் அமைச்சர்களும் நிர்வாகிகளும் பேசிவரும் சூழலில், காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமாரின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.