போ*தைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது.!
நவகமுவ கொரதொட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 1 கிலோகிராம் 69 கிராம் 540 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான நபர் கடுவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.