உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு தொடர்பில் 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
169 பார்வைகள்

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் ஊர்காவற்றுறை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை வழங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அனிபாரஜீப் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த விசாரணையை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இதனைக் கருத்தில் எடுத்த நீதிமன்றம் விரைவான விசாரணைக்கான கட்டளைகளைப் பிறப்பித்தது. அதன்படி, இரண்டு பொதுமக்கள், ஊர்காவற்றுறை பொலிஸார், யாழ். குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 15 பேரை நீதிமன்றத்துக்கு செப்ரெம்பர் 4ஆம் திகதி அழைத்து அவர்களிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்கான அழைப்புக் கட்டளையை உடனடியாக அனுப்புமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்பதாக, வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார், 1.15 மணியளவில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் ஹையஸ் ஒன்றை இடைமறித்திருந்தனர். எனினும், அந்த ஹையஸ் வாகனம் பொலிஸாரின் உத்தரவுக்குக் கட்டுப்படாமல் வேகமாகப் பயணித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 17 வயதான சிறுவன் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0