உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

செம்மணிப் புதைகுழி பேரவலம்; 500 ஐக் கடந்த மனித எலும்புக்கூடுகள்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
103 பார்வைகள்

இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியான யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகள் நேற்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளதுடன், இதுவரை மொத்தம் 507 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 46ஆம் நாள் அகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.

நேற்றைய அகழ்வின் போது புதிதாக 8 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 7 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை கண்டறியப்பட்ட 507 மனித என்புத் தொகுதிகளில், 501 தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வின்போது, சிறுமி ஒருவரின் என்புத் தொகுதியில் இரு பக்கங்களிலிருந்தும் இரு காப்புகளும், ஊசி ஒன்றும் சான்றுப்பொருட்களாக மீட்கப்பட்டு நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வின்போதும் என்பு எச்சங்கள் குவியல்களாகவே மீட்கப்பட்டன. இதன் மூலம் இதுவரையான காலப்பகுதியில் குவியல்களாக எடுக்கப்பட்ட என்பு எச்சங்களின் எண்ணிக்கை 40 ஆகும்.

இதனிடையே, செம்மணிப் புதைகுழியில் எழுமாறாகத் தோண்டப்பட்ட இரு குழிகளில் முதலாவது குழியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் அடுத்தகட்ட அகழ்வுப் பணிகள் குறித்து நிபுணர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 100 நாட்கள் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0