உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

செம்மணியில் 500 ஐ நெருங்கிய எலும்புக்கூடுகள்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
48 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று (மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 45ஆவது நாள் அகழ்வில்) புதிதாக 8 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 499 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 494 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்றைய அகழ்வின் போது சிறுவர் ஆடை ஒன்றின் பொத்தான் மற்றும் மூன்று நாணயக் குற்றிகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, செம்மணிப் புதைகுழியில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் எழுமாறாகக் குழிகளைத் தோண்டி ஆய்வு செய்யும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நேற்று இரண்டு இடங்களில் முன்னெடுக்கப்பட்டன. இந்தக் குழிகளில் மனித என்புகள் அல்லது தடயப் பொருட்கள் ஏதேனும் அடையாளம் காணப்பட்டால், அடுத்த கட்டத் தொடர் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0