இனந்தெரியாத நபர்களால் அடித்து உடைக்கப்பட்ட ஏழைத் தொழிலாளியின் வீடு.!
யாழ் – வடமராட்சி கிழக்கு, J/429 வத்திராயன் கிராமத்தில், 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் (சுனாமி) பாதிக்கப்பட்டு, வீடும் காணியுமின்றி தவித்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் காணி வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு வழங்கப்பட்ட காணியில் கடந்த 21 வருடங்களாக வசித்து, அதனைப் பராமரித்து வந்த சிவதாஸ் ஞானவேல் என்பவரது இல்லமும், அதனைச் சுற்றியிருந்த காணி வேலிகளும் நேற்று (06) இனம் தெரியாத நபர்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
