விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு.!
மாவத்தகம, அஹஸ்யானபிட்டி வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவத்தகம பகுதியில் இருந்து அஹஸ்யானபிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாவத்தகம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து பயணித்த நபரும் இவ்விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.