உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூழ்ச்சிதாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
47 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைப் போன்று, அந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான சூழ்ச்சிதாரிகளுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வருடத்துக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான 71 ஆயிரத்து 700 மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருக்கும் முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாக்குதலைத் தடுக்கத் தவறினார்கள் என்று தெரிவித்தே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை நாம் தவறு என்று கூற வரவில்லை.

ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டுமென்றால், தாக்குதலைத் தடுக்கத் தவறியவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டதைப் போன்று, இதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட சூழ்ச்சிதாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஒரு குழுவினர்தான் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டனர். அதனால்தான் அவர்களால் அதனைத் தடுக்க முடியாமல் போனது. எனவே, பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும். சஹ்ரானை வழிநடத்தியவர்களும் கட்டாயம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.” – என்றார்.

இதன்போது அரசின் நிதி மற்றும் வருமானக் கொள்கை குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.

“அரசு மேலதிக வருமானத்தைத் தேடிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது. ஆனால், இந்த மேலதிக வருமானத்துக்காக அரசு வரிகளை அதிகரித்து சாதாரண மக்களுக்கு எவ்வாறான அழுத்தங்களைக் கொடுத்தது என்பது அனைவருக்கும் தெரியும். அரசுக்கு 71 பில்லியன் மாத்திரமல்ல, அதனைவிட அதிகமான பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஏனெனில், அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் அவ்வாறே திறைசேரிக்கு மீள அனுப்பப்படுகின்றது.

அவ்வாறில்லாமல், அரசு திறம்பட நிதி முகாமைத்துவம் செய்து மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாகக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. மாறாக, அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை எந்தவொரு அபிவிருத்தியும் செய்யாமல் மீளப் பெற்றுக்கொண்டுள்ளது என்றே கூற வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0