டிக்கோயா ஆறு பெருக்கெடுப்பு! : நீரில் மூழ்கிய குடியிருப்புக்கள்!!
காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு ஹட்டனில் இருந்து நீரேந்திச் செல்லும் டிக்கோயா ஆறு பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக, ஆற்றின் இருமருங்கிலும் உள்ள பல வீடுகள் இன்று (3) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டும் டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததால் இவ்வாறானதொரு அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் டிக்ஓயா பெருக்கெடுத்துள்ளதால் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.