உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கிரிக்கெட் நடுவர்களைக் கௌரவிக்கும் விழா.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
54 பார்வைகள்

நிந்தவூர் நடுவர்கள் கல்வி மேம்பாட்டு அமைப்பின் (Society of Nintavur Umpiring Education) ஏற்பாட்டில், நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர்களைக் கௌரவிக்கும் “Extolling & Honouring Umpiring – 2026” சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (02) நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம். இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும் சட்டத்தரணியுமான ஏ.எல். றியாஸ் ஆதம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

கிரிக்கெட் விளையாட்டில் நேர்மை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் நடுவர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையிலும், விளையாட்டின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் பேணி வரும் நீண்டகால அனுபவம் வாய்ந்த நடுவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் இவ்விழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

“விளையாட்டுத் துறையில் நடுவர்களின் நேர்மையான சேவை என்பது ஒரு போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான முக்கிய அடித்தளமாகும். களத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் நடுவர்களைச் சமூகமாக மதித்து கௌரவிப்பது காலத்தின் தேவையாகும்” என நிகழ்வில் உரையாற்றிய பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் அம்பாறை மாவட்ட கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் தலைவர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் கௌரவிக்கப்பட்டார்.

மேலும், நிந்தவூர் பிராந்திய விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகிகள், அணித்தலைவர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டுத் துறைப் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

80 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0