உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வடிகான் அமைப்புகள் அடைபட்டதால் நீரில் மூழ்கிய வீதிகள்; பொதுமக்கள் அசௌகரியம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
64 பார்வைகள்

சாய்ந்தமருது மற்றும் அதன் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (2) மாலை மழை நீரானது வடிகான்கள் வழியே முறையாக வழிந்தோட வழியின்மையினாலேயே பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகன சாரதிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதோடு, அன்றாடக் காரியங்களை மேற்கொள்வதிலும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

முறைசாரா வடிகான் அமைப்புகள் மற்றும் அடைபட்டுள்ள நீர்வரத்து வழிகளை உடனடியாகச் சீரமைத்து, தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவதற்குப் பிரதேச சபையும் உரிய அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

47 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

59 0 0