உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நுவரெலியாவில் கனமழை; மக்கள் அவதி.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
94 பார்வைகள்

நள்ளிரவு பெய்த கனமழையால் 55 குடும்பங்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இச் சம்பவம் நுவரெலியா மாவட்டத்தில் இருவேறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அம்பகமு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்திற்கு உரித்தான பிலக்வாட்டர கெனில்வத்த பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் 26 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் இன்று அதிகாலை வேளையில் பாதுகாப்பாக இடம் பெயர்ந்துள்ளனர்.

அத்துடன் கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்க்கு உரித்தான மேபில்ட் தோட்டத்தின் ரொப்கீல் பிரிவில் இன்று அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 30 குடும்பங்களை சேர்ந்த 56 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நேற்று காலை முதல் இன்று காலை வரையிலான காலகட்டத்தில் கங்க இகல கோரலை பகுதியில் 196.6 மில்லி மீற்றர் மழை பதிவாகி உள்ளது.

கிரிவன்னெளிய பகுதியில் 184.2 மில்லி மீற்றர் மழை பதிவாகி உள்ளது.

அரநாயக்க பகுதியில் 182.6 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. வட்டவளை பகுதியில் 163.2 மில்லி மீற்றர் மழை பதிவாகி உள்ளது என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

56 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

70 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

55 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

42 0 0