உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறைச்சாலையைக் கூட நிர்வகிக்க முடியாத அரசால் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும்?

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
46 பார்வைகள்

சிறைச்சாலை அமைப்பைச் சரியாக நிர்வகிக்க முடியாத தற்போதைய அரசால், 22 மில்லியன் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதே இன்று கேள்விகுறியாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“நடமாடும் நூலகம் என்று அழைக்கப்படும் அறிஞர்கள் நிறைந்த அரசை உருவாக்குவதாகக் கூறிய தற்போதைய அரசு, வெளிநாட்டுக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்த முடியாமலும், சிறைச்சாலைகளைக் கட்டுப்படுத்த முடியாமலும் திணறுகின்றது. இவ்வாறானதொரு அரசால் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும்?

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசு ஆதரவாக வாக்களித்தது. இருப்பினும், சில நாட்களுக்குப் பின் மீண்டும் மஹர சிறைச்சாலையில் மோதல் வெடித்துள்ளது. நீதி அமைச்சரைப் பாதுகாத்த அரசாங்கம், தற்போது அங்கே நிலவும் குழப்பமான சூழ்நிலையைச் சரிசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு சிறைச்சாலையைக் கூடக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத இந்த அரசால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. மாறாக, நாட்டை அழிக்கும் ஓர் அரசே தற்போது செயற்படுகின்றது. இன்று நாட்டின் 30 முதல் 40 சதவீத மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ளதுடன், நகர்ப்புற, கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த சமூகமும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

56 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

70 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

55 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

42 0 0