உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மஹர சிறைச்சாலைச் சம்பவம் நீர்கொழும்புக் கலவரத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
58 பார்வைகள்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையானது, நீர்கொழும்பு சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும், மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று (02) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், மஹர சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, சிறைச்சாலைகளுக்குள் இவ்வாறான பதற்ற நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு வெளியில் உள்ள குழுவொன்று திட்டமிட்ட வகையில் வழிநடத்துகிறதா? என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் எவ்வித காரணமும் இன்றி இவ்வாறான சம்பவங்கள் எழவில்லை என்றும், எனவே இது குறித்து கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் ஏற்படுவதற்கு அங்கு காணப்படும் நெரிசலும் ஒரு காரணமாகும் எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே இந்த நிலைமை காணப்பட்டதாகக் கூறினார்.

இருப்பினும், தற்போது அந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் முக்கியமாக சுட்டிக்காட்டிய மற்றொரு விடயம், கைதிகள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகும். அதற்கமைய, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

56 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

70 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

55 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

42 0 0