உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு சட்டமா அதிபர் அனுமதி!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
67 பார்வைகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பிலான சட்டப்பூர்வ விளக்கமளிப்பு நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நீதி அமைச்சினால் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி மூலம் வெளியிடப்படவுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 02 வருடங்களால் நீடிப்பதற்கான முன்மொழிவொன்று அண்மையில் நீதி அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதால், அவ்வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதே இத்தீர்மானத்தின் நோக்கமாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

56 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

70 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

55 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

42 0 0