உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல் மோசடி; ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பழைய மாணவன்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
88 பார்வைகள்

யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் உடைக்கப்பட்டு புதிய மதில் அமைக்கப்பட்டது.

குறித்த மதில் அமைப்பதற்கு பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும் முறைகேடாகவும் பெறப்பட்டமை தகவலறியும் சட்ட மூலத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அதாவது வலிகாம கல்வி வலயத்தால் இரண்டு கடிதத் தலைப்புக்கள் பரிமாறப்பட்டதுடன் ஒன்றில் திகதி இடப்படாமல் உயர் அதிகாரியின் கையெழுத்து இடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது குறித்த மதிலை மீள புனரமைப்பதற்கு மட்டும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுமதிக்கப்பட்ட கடிதம் வழங்கப்பட்ட நிலையில் யாருடைய தூண்டுதலின் பேரில் முழுமையாக மதில் இடித்து அழிக்கப்பட்டது.

மேலும் தற்போது இடம்பெற்ற 150ஆவது ஆண்டு விழாவுக்கான நிதி பாடசாலையில் அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளை பின்பற்றாது தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை தொடர்பிலும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளோம்.

எமது முறைப்பாடுகளை வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை.

குறித்த மதில் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட முன்னரே தவிசாளர் பாடசாலை நிர்வாகத்திற்கு மதில் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.

ஆகவே, குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதோடு புதிய விடயங்களை மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகள் வராது தன்னிச்சையாக செயல்படும் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய தரப்பினர்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நடவடிக்கை போதாது இடத்து நீதிமன்றம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0