உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
75 பார்வைகள்

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (23.07.2026) வியாழக்கிழமை உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர், யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம் மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு எதிரே அமைந்துள்ள தொன்மை வாய்ந்த பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் தலைமையிலான குழுவினர், அதன் புராதனத் தன்மை அழியாதவாறு அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான எதிர்காலத் திட்ட ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.

இது தொடர்பான விசேட விளக்கங்களை அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள் இதன்போது உரிய அதிகாரிகளுக்கு வழங்கினார்.

இந்தக் களப் பயணத்தின் போது, தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், தொல்பொருள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரிகள், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கௌரவ அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்குப் பயணம் செய்தனர். அங்கு அவர்களுக்கு யாழ். மாநகர சபையின் கௌரவ பிரதி மேயர், ஆணையாளர் மற்றும் பிரதம நூலகர் ஆகியோர் வரவேற்பளித்தனர்.

பொது நூலகத்தின் செயற்பாடுகளைச் சுற்றிப் பார்வையிட்ட அதிதிகள், கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நூலகத்தின் அபிவிருத்திக்கென மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க அவர்களால் விசேடமாக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரூபா நிதியின் கீழான வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

இந்தச் செயற்றிட்டங்கள் தொடர்பில் பிரதம நூலகரால் அதிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், குறித்த திட்டத்தின் கீழ் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைப்பாடுகளையும் அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் இதன்போது நேரில் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

113 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

94 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

102 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

115 0 0