உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
23 வியாழன்

சமூக ஊடகக் கட்டுப்பாடு தொடர்பில் தனிநபர் முன்மொழிவை அரசு அலட்சியப்படுத்துகிறது!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
54 பார்வைகள்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான தனிநபர் முன்மொழிவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள போதிலும், அரசு அது குறித்து எவ்வித கவனமும் செலுத்தாமல் அலட்சியமாகச் செயற்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம் சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் மிஹெரிவிக்கையில்,

“உலக நாடுகள் சிறுவர்களின் பாதுகாப்புக்காகச் சட்டங்களை இயற்றிவரும் நிலையில், இலங்கையில் அரசு மிகக் குறைந்த கவனத்தையே செலுத்துகின்றது. எதிர்க்கட்சித் தரப்பால் தயாரிக்கப்பட்ட சட்டத் திருத்தம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள போதும், அரசு எதுவும் அறியாதது போல் மௌனம் காக்கின்றது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசு முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. காலிபணியிடங்களை நிரப்புவதை விடுத்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைச் சீர்குலைப்பதாகும். இதற்குச் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

மின்சாரக் கட்டணம் 45 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், எரிபொருள் விலை சுமார் 150 ரூபாவால் அதிகரித்து, பணவீக்கமும் உயர்ந்துள்ளதால் சாதாரண மக்களும் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் ஜனரஞ்சகத்தன்மை 75 சதவீதம் என அரசு கூறுமாயின், ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி ஜனநாயக ரீதியிலான அதிகாரப் பரவலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் வீழ்ச்சிக்கு ராஜபக்ஷ முகாமே பொறுப்பாகும். 2029 இல் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதுடன் சஜித் பிரேமதாஸ அடுத்த தலைவராக உருவெடுப்பார். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பான பேச்சுகள் சுமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” – என்றார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தறுமாறு ரவிகரன் எம்.பி. கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி,…

53 0 0
இலங்கை செய்திகள்

யாழில் 50ற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு!

யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு…

43 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை தகவல்…

44 0 0
இலங்கை செய்திகள்

யாழ் ராணிக்கு வயது நான்கு!

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் யாழ் ராணி புகையிரதத்தில் நாளார்ந்தம் பயணம் செய்யும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டு…

76 0 0