உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

சங்கானையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
33 பார்வைகள்

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் மானிப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பூட்டப்பட்டிருந்த வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டனர். இதன்போது, மேற்படி இளைஞர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

1997 ஆம் ஆண்டு பிறந்த இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்துக்கு அருகில் பியர் போத்தல்களும், ஊசி செலுத்தப் பயன்படுத்தப்படும் சிரிஞ்சும் காணப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், மேற்படி இளைஞர் உயிரிழந்து சுமார் மூன்று நாள்கள் ஆகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

உறவினர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வசித்து வரும் நிலையில், உயிரிழந்த இளைஞர் சங்கானையில் தனியாகவே வசித்து வந்துள்ளார்.

சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, இன்று காலை கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அதிகாலை முதலே முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும்…

59 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் உட்கார்ந்த நிலையில் மற்றுமொரு எலும்புக்கூடு அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை, கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் மனித என்புக்கூடு…

28 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக தர்மலிங்கம் ரமேஷ் தெரிவு

மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக  தர்மலிங்கம் ரமேஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் நிர்வாக தெரிவு இன்று…

41 0 0
இலங்கை செய்திகள்

ஹொரணையில் கோர விபத்து -இரு இளைஞர்கள் பலி!!

களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை – மொரகஹஹேன வீதியின், கனன்வில விகாரைக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹொரணை பகுதியில்…

65 0 0