உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

கிணற்றில் விழுந்த கோழிக் குஞ்சை மீட்க முயன்ற குடும்பப் பெண் மின்சாரம் தாக்கி பலி!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
11 பார்வைகள்

யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணிப் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக் குஞ்சை மீட்க முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

வரணிப் பகுதியைச் சேர்ந்த தினேஷ் நேசமலர் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒன்பது மாதக் குழந்தை உட்பட இரு பிள்ளைகளின் தாயான இவர், நேற்று சனிக்கிழமை இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வரணிப் பகுதியிலுள்ள 12 அடிப் பாதையூடாகக் கூட்டுறவு நிறுவனம் ஒன்றுக்குச் செல்லும் ‘3 பேஸ்’ மின்சார இணைப்பு, அப்பகுதி மக்களின் குடியிருப்புகளுக்கு மேலாகச் செல்கின்றது. நேற்று, தனது வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த கோழிக் குஞ்சை மீட்க, இரும்புக் கம்பி ஒன்றின் உதவியுடன் மேற்படி பெண் முயன்றுள்ளார்.

அப்போது, கிணற்றுக்கு மேலாகச் சென்ற மின் இணைப்புக்கு அருகில் இரும்புக் கம்பி சென்றமையால், மின்சாரம் பாய்ந்து பெண்ணைத் தாக்கியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் கிணற்றுக்குள் விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

உடனடியாகச் செயற்பட்ட உறவினர்கள், 10 நிமிடங்களுக்குள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, இன்று காலை கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அதிகாலை முதலே முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும்…

59 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் உட்கார்ந்த நிலையில் மற்றுமொரு எலும்புக்கூடு அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை, கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் மனித என்புக்கூடு…

28 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக தர்மலிங்கம் ரமேஷ் தெரிவு

மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக  தர்மலிங்கம் ரமேஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் நிர்வாக தெரிவு இன்று…

41 0 0
இலங்கை செய்திகள்

ஹொரணையில் கோர விபத்து -இரு இளைஞர்கள் பலி!!

களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை – மொரகஹஹேன வீதியின், கனன்வில விகாரைக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹொரணை பகுதியில்…

65 0 0