உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

செம்மணி விடயத்தில் சர்வதேச விசாரணைக்கு அநுர அரசு ஒத்துழைக்க ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்த வேண்டும்.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
30 பார்வைகள்

எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழு செம்மணி மனிதப் புதைகுழியை அவதானிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன இதனை பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நாம் வரவேற்கின்றோம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழர் தாயகத்தில் மிகப் பெரிய மனித படுகொலைப் புதைகுழியாக செம்மணிப் புதைகுழி மாறியுள்ளது. உள்நாட்டில் மனிதப் புதைகுழி தொடர்பாக கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல பொறிமுறைகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க தவறியதால் உள்நாட்டுப் பொறிமுறையில் ஏமாற்றம் அடைந்ததுடன் நம்பிக்கையையும் இழந்து விட்டனர்.

ஆகவே, பாதிக்கப்பட்ட மக்கள் 2019 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக சகல சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி நிற்கும் ஒரே நிலைப்பாடான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை மேற்கொள்ள இலங்கையின் தற்போதைய அநுரகுமார அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதற்கான அழுத்தங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு மேற்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இப்படியான பல கோரிக்கைக் கடிதங்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அநுரகுமார அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் விவகாரத்தில் அவ்வப் போது நீலிக் கண்ணீர் வடித்து கடந்து செல்லப் பார்க்கின்றனர். உரிய செயல் நடவடிக்கைகளில் இறங்கத் தயாராக இல்லை. இது தான் நிதர்சனம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்வு.!

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்லூரியின் அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இரு சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் வகையில்…

21 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 10 குளங்களை முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை.!

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

நடைபவனியில் சுமந்திரன் கலந்து கொள்ள மாட்டார்.!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே…

18 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.!

கொத்மலை பிரதேச சபையின் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தவலந்தனை தொண்டமான் கலாச்சார…

24 0 0