உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

நாட்டில் டெங்கு பாதிப்பு தீவிரம்; 24 மணித்தியாலத்தில் மூவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 24 மணி நேரம் முன்
65 பார்வைகள்

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் டெங்குத் தொற்று காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 478 ஆக உயர்ந்துள்ளது.

டெங்குப் பரவலின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், இம்மாதத்தின் முதல் 17 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 19 ஆயிரத்து 100 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

நாட்டிலேயே அதிகப்படியான டெங்கு பாதிப்புகள் மேல் மாகாணத்திலேயே பதிவாகி வருகின்றன. மாகாண ரீதியான தரவுகளின்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 15 ஆயிரத்து 596 டெங்கு நோயாளர்கள் பதிவாகி, முதலிடத்தில் உள்ளது.

டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், நுளம்புகள் பெருகுவதைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் பங்களிப்பு மிக அவசியமானது என்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அதிகாரிகள், தத்தமது சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக அழிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மக்கள் இது குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் சங்கு கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு வீதி நாடகம்!

பல தசாப்தங்களாகக் காணி உரிமைக்காகப் போராடும் மலையக மக்களின் அவலங்களையும், அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி சங்கு கலைக்கழகத்தினால் ‘நிலமே எங்கள் நிலைக்களம்’ என்ற வீதி…

52 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு கிடைக்கும் – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற…

61 0 0
இலங்கை செய்திகள்

விவசாயிகளின் வீழ்ச்சிக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – திலித் ஜயவீர வலியுறுத்தல்!

“எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும். ஆனால், இன்றைய அரசு இந்நாட்டின் நாகரிகத்தின் முன்னோடி ஒரு சட்டவிரோத மது உற்பத்தியாளர் என்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பிள்ளைகளின் கண்முன்னே மனைவியை வெட்டிக் கொ#லை செய்த கணவன்!

காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில் நேற்று இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொ#லை செய்யப்பட்டுள்ளார். இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த…

64 0 0