உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

நவீன வசதியுடன் மாடு அறுக்கும் மடுவம் புனரமைக்கப்பட்டு கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
120 பார்வைகள்

மன்னார் நகரசபையினால் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் கோந்தை பிட்டி பகுதியில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (18) காலை பயன்பாட்டிற்காக வைபவ ரீதியாக திறந்து விடப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் குறித்த மாடு அறுக்கும் மடுவத்தை திறந்து கையளித்தார்.

கடந்த காலங்களில் குறித்த மாடு அறுக்கும் மடுவத்தில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்பட்டு வந்த நிலையில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டதாக நகர சபைக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக குறித்த மாடு அறுக்கும் மடுவத்தில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்ட நிலையில் சீல் வைத்து மூடப்பட்டது.

இந்த நிலையில் மன்னார் நகரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மாடுகளை நிலத்தில் போட்டு வெட்டாது நவீன முறையில் செயினில் கொழுவி சுத்தமான முறையில் வெட்டும் வகையில் குறித்த மடுவம் புனரமைக்கப்பட்ட நிலையில் வைபவ ரீதியாக இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்ற மாடுகள் குறித்த மடுவத்தில் சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பில் உரிய அனுமதி பெறப்பட்ட நிலையில் அறுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்வு.!

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்லூரியின் அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இரு சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் வகையில்…

21 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 10 குளங்களை முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை.!

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

நடைபவனியில் சுமந்திரன் கலந்து கொள்ள மாட்டார்.!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே…

19 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.!

கொத்மலை பிரதேச சபையின் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தவலந்தனை தொண்டமான் கலாச்சார…

24 0 0