உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிய பயிற்சி மருத்துவர்கள் நியமனம்.!

60 பார்வைகள்

நாட்டின் பொதுச் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு பயிற்சி மருத்துவர்கள் இன்று சனிக்கிழமை தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கடமைகளைப் பொறுப்பேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வின் போது புதிய மருத்துவர்களுக்கான நியமனக் கடிதங்களை வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் வழங்கி வைத்தார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்குமுகப் பயிற்சி தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப் பயிற்சிகளைத் தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவப் பிரிவுகளில் உத்தியோகபூர்வமாகப் பயிற்சிக் கடமைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

பொதுமக்களுக்குத் தரமான மற்றும் மனிதநேயமிக்க சுகாதாரச் சேவையை வழங்கும் நோக்கில், அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவக் குழுவில் இணைந்துள்ள புதிய மருத்துவர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகத்தினர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல். பாறூக், முகாமைத்துவ தர வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம். ரயிஸ், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்..எஸ். இர்ஷாத், தாதிய பரிபாலகிகளான திருமதி ஜி. ஜெகதீஸ்வரி, திருமதி ஏ.ஜி.எப். ஹினாயா மற்றும் தலைமை மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் என்.எல்.எம். தொளபீக் உட்பட வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் சங்கு கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு வீதி நாடகம்!

பல தசாப்தங்களாகக் காணி உரிமைக்காகப் போராடும் மலையக மக்களின் அவலங்களையும், அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி சங்கு கலைக்கழகத்தினால் ‘நிலமே எங்கள் நிலைக்களம்’ என்ற வீதி…

52 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு கிடைக்கும் – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற…

61 0 0
இலங்கை செய்திகள்

விவசாயிகளின் வீழ்ச்சிக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – திலித் ஜயவீர வலியுறுத்தல்!

“எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும். ஆனால், இன்றைய அரசு இந்நாட்டின் நாகரிகத்தின் முன்னோடி ஒரு சட்டவிரோத மது உற்பத்தியாளர் என்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பிள்ளைகளின் கண்முன்னே மனைவியை வெட்டிக் கொ#லை செய்த கணவன்!

காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில் நேற்று இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொ#லை செய்யப்பட்டுள்ளார். இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த…

64 0 0