உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

மாற்றுத்திறனாளிகளுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஜனாதிபதி செயலாளரிடம் கையளிப்பு.!

70 பார்வைகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினால், ஆறு முக்கிய துறைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கையளிக்கப்பட்டது.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு, அவர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் சமூகம் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “மாற்றுத்திறனாளிகளை சமூகத்தின் சாதாரண பங்காளிகளாக மாற்றுவது அவசியம். இதற்காக ‘ஒன்றாக பிடி தளராது’ எனும் தேசிய கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளும் அந்தத் தேசிய கொள்கைக்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளன.” – என்று குறிப்பிட்டார்.

முக்கிய கலந்துரையாடல் அம்சங்கள்

  • சுற்றுலாத் துறை: சுற்றுலாத்துறையில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் அவர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துதல்.
  • வேலைவாய்ப்பு: பாரம்பரியமான பயிற்சிகள் மூலமாக வேலைவாய்ப்பு சந்தையில் மாற்றுத்திறனாளிகளுக்குப் போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதால், நவீன தேவைக்கேற்ற பயிற்சிகளை முன்னெடுத்தல்.
  • அரசின் உறுதிமொழி: மாற்றுத்திறனாளிகளை சமூகத்தின் சம பங்காளிகளாக மாற்ற அரசாங்கம் பல கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், இதற்கான சுற்றறிக்கைகள் மற்றும் பணிப்புரைகளை விரைவாக வெளியிடுவதுடன், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, நாடாளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் சங்கு கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு வீதி நாடகம்!

பல தசாப்தங்களாகக் காணி உரிமைக்காகப் போராடும் மலையக மக்களின் அவலங்களையும், அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி சங்கு கலைக்கழகத்தினால் ‘நிலமே எங்கள் நிலைக்களம்’ என்ற வீதி…

52 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு கிடைக்கும் – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற…

61 0 0
இலங்கை செய்திகள்

விவசாயிகளின் வீழ்ச்சிக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – திலித் ஜயவீர வலியுறுத்தல்!

“எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும். ஆனால், இன்றைய அரசு இந்நாட்டின் நாகரிகத்தின் முன்னோடி ஒரு சட்டவிரோத மது உற்பத்தியாளர் என்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பிள்ளைகளின் கண்முன்னே மனைவியை வெட்டிக் கொ#லை செய்த கணவன்!

காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில் நேற்று இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொ#லை செய்யப்பட்டுள்ளார். இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த…

64 0 0