உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
70 பார்வைகள்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில், மன்னார் மாவட்ட செயலகம், மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை இந்து மா மன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (17) காலை மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

‘ஆடிபிறப்பில் தமிழர் நாம் கூடி குதூகலித்து கொண்டாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் பாடசாலையின் பிரதி அதிபர் தலைமையில் ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டதோடு, மன்னார் வலயக் கல்வி திணைக்களத்தின் பிரதி கல்வி பணிப்பாளர், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் உள்ளடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நவாலியூர் சோமசுந்தர புலவரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அரசாங்க அதிபர் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்வு.!

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்லூரியின் அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இரு சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் வகையில்…

20 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 10 குளங்களை முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை.!

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

நடைபவனியில் சுமந்திரன் கலந்து கொள்ள மாட்டார்.!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே…

18 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.!

கொத்மலை பிரதேச சபையின் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தவலந்தனை தொண்டமான் கலாச்சார…

24 0 0