உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை; ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
77 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹகெலே பகுதியில் நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் பெருந்தொகை போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை(16) மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரின் வீட்டைப் பொலிஸார் திடீரென முற்றுகையிட்ட போது, அவர் விற்பனைக்காக ‘ஐஸ்’ போதைப்பொருளைச் சிறிய பொட்டலங்களாகத் தயாரித்துக் கொண்டிருந்த வேளை கையும் மெய்யுமாகப் பிடிபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 4,400 மில்லிகிராம், கஞ்சா 30 கிராம், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 21,000 ரூபா, தராசு போன்ற பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இளைஞர்களைப் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கி, இந்த வியாபாரத்தை மேற்கொண்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இகினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு இணங்க, மிகவும் திட்டமிட்ட முறையில் இந்த வெற்றிகரமான சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

கிராம மக்களை இலக்கு வைத்து நிதி மோசடிகள்.!

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிதி மோசடிகளிலிருந்து கிராம மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்வு அம்பாறை தலைமையக பொலிஸ் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. அம்பாறை…

67 0 0
அம்பாறை செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.!

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய காணொளியைத் தொடர்ந்து, வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை இயக்கி பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது…

91 0 0
அம்பாறை செய்திகள்

கோர விபத்தில் அரச உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில், மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் அரசு உத்தியோகத்தர் ஒருவர்…

121 1 0
அம்பாறை செய்திகள்

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய இளைஞர்கள் சிக்கினர்.!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தான முறையில் பயணித்த இளைஞர்கள் குழுவொன்றைச் சம்மாந்துறைப் பொலிஸார் அதிரடியாகக்…

102 0 0