உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
15 புதன்

துப்பாக்கியுடன் கைதான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

49 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியொன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலாங்கொடை பிரதேசசபை உறுப்பினரை, எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (13) உத்தரவிட்டது.

சந்தேகநபரான பிரதேசபை சபை உறுப்பினர் நேற்று பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, பலப்பிட்டிய நீதிவான் பவித்ரா சஞ்சீவனி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேகநபரிடமிருந்து ‘ரிப்பீட்டர்’ ரக துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டதை அடுத்து, சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 11ஆம் திகதி காலி குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

நேற்றைய தினம் மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சமர்ப்பனங்களையும் பரிசீலித்த நீதிவான் சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமம்; பின்னணியில் அநுர அரசு இல்லை.!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின் பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…

50 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் நடராசாவின் தாயார் காலமானார்.!

‘ராவய’ வெளியீடான ‘ஆதவன்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவரும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பிராசா நடராசாவின் தாயார் திருமதி விசாலாட்சி…

54 0 0
இலங்கை செய்திகள்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்துக்கு முரணான செயல்.!

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி…

62 0 0
இலங்கை செய்திகள்

உளவுத்துறை அறிக்கையின்படியே பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு.!

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுகின்றதே தவிர, அது…

69 0 0