துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது.!
மஹரகம பகுதயில் ரிவோல்வர் ரகத் துப்பாக்கியை ஒத்த துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹரகம, புகையிரத அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, ஞாயிற்றுக்கிழமை (12) மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகையிரத அவென்யூ பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கியின் பின்னணி மற்றும் ஏதேனும் குற்றச் செயல்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.