உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மட்டக்களப்பில் தற்காலிக பாலம் திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
50 பார்வைகள்

மட்டக்களப்பு நகருக்குள் வரும் பிரதான பாலங்களில் ஒன்றாகவும் அண்மையில் இடிந்து வீழ்ந்த பாலமாகவும் உள்ள புதுப்பாலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அண்மையில் இந்த பாலம் உடைந்து வீழ்ந்த நிலையில் தற்காலிகமாக பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பாலம் உடைந்து வீழ்ந்ததை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்திசாமி பிரபு, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து உடனடியாக பெய்லி பாலம் ஒன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்காலிக வீதியினை அமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்திருந்த நிலையில் இந்த பணிகள் இன்று நிறைவுபெற்று வீதியை பொதுமக்களின் பாவனைக்கு வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் ந.கதீசன், நிறைவேற்று பணிப்பாளர் சு.கிருஸாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தற்போது தற்காலிக பாலம் மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவான மக்கள் குறித்த பாலத்தின் ஊடாக பயணித்ததை காணமுடிந்தது.

குறித்த பாலம் தற்காலிக பாலம் என்ற காரணத்தினால் குறித்த வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பாலம் தற்காலமாக திருத்தப்பட்டு போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு நகருக்குள் உள்ள பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்துகள் இலகுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0