போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!
அனுராதபுரம், விஜேபுர பகுதியில் 5 கிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் அனுராதபுரம் வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம், பாலாடிகுளம் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 28 வயதுடையவர் ஆவார்.
வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜேபுர, நாகசேன மாவத்தை பகுதியில் புதன்கிழமை (8) மாலை நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 325 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வலய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.