• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, July 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result

அரசின் நிர்வாகக் குறைபாடுகளால் நாடே ஆபத்தில்.!

Mathavi by Mathavi
July 7, 2026
in இலங்கை செய்திகள்
0
Home இலங்கை செய்திகள்
Share on FacebookShare on Twitter

தற்போதைய அரசின் நிர்வாகக் குறைபாடுகள், நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை மரணங்கள் மற்றும் டெங்கு ஒழிப்புத் திட்டங்களின் தோல்விகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.

இங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மொரட்டுவை தொகுதி அமைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான சுஜித் புஷ்பகுமார தெரிவித்ததாவது,
“நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படும் தகவல் பெரும் கவலையளிக்கின்றது. இன்று ஜனாதிபதியாக இருக்கும் அநுரகுமார திஸாநாயக்க, அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அரசின் பொறுப்பில் உள்ள கைதிகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசினார்.

சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் பாதுகாப்பு அரசின் பொறுப்பாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் இவ்வாறு மரணமடையும் போது அதற்கு யார் பொறுப்பேற்பது? இந்த நிலைமையை ஜனாதிபதி இன்று நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பெருமளவிலான கைதிகள் தற்போதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்களைப் பாதுகாக்குமாறு கோரி பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும்.” – என்றார்.

தொடர்ந்து டெங்கு பரவல் குறித்துப் பேசிய அவர், “நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக மொரட்டுவை பகுதியில் இந்த நோய் தீவிரமடைந்துள்ளது. இவ்வாறானதொரு ஆபத்தான சூழலிலும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் டெங்கு ஒழிப்பை முன்னிறுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்து இந்த நோயைக் கட்டுப்படுத்தும் வரை காத்திருக்காமல், அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.” – என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜா – எல தொகுதியின் அமைப்பாளர் ரங்க கொடிதுவக்கு தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசு டெங்கை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு வெறும் ஊடகக் காட்சிகளை மட்டுமே நடத்தி வருகின்றது. கடந்த காலங்களில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் டெங்கு ஒழிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமாக இறங்கின. ஆனால், தற்போதைய அரசிடம் அதுபோன்ற எந்தவொரு தயார்நிலையோ அல்லது முறையான வேலைத்திட்டங்களோ இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, சிறைச்சாலைகளின் சுகாதார மற்றும் பாதுகாப்பு நிலையை மேம்படுத்தி கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு ஆபத்திலிருந்து மக்களை மீட்பதற்கும் அரசு வெறும் விளம்பரங்களை விடுத்து, உடனடியாகத் தலையிட்டு முறையான திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும்.” – என்றார்.

Previous Post

நோர்வூட் பிரதேச சபை தவிசாளரின் செயற்பாடுகளுக்கு 14 உறுப்பினர்கள் எதிர்ப்பு.!

Next Post

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; யாழ். சிறைச்சாலைக்கு கைதிகள் மாற்றம்.!

Related Posts

நோர்வூட் பிரதேச சபை தவிசாளரின் செயற்பாடுகளுக்கு 14 உறுப்பினர்கள் எதிர்ப்பு.!

நோர்வூட் பிரதேச சபை தவிசாளரின் செயற்பாடுகளுக்கு 14 உறுப்பினர்கள் எதிர்ப்பு.!

by Mathavi
July 7, 2026
0

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன் அவர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் இன்று (07)...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது.!

by Mathavi
July 7, 2026
0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் கீழ் வரும் ஃபேர்லோன் தேயிலை தோட்டத்தின் சின்ன சூரியகந்த பகுதியில் வசித்து வரும் 62 வயதுடைய நபர் நேற்று மீட்டியாகொட விவசாய நிலப்...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

by Mathavi
July 7, 2026
0

மன்னார் - மடுகல்வி வலயத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சீர்செய்வதற்குரிய, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

நுகர்வுக்குப் பொருத்தமற்ற பெருந்தொகையான சீனி கைப்பற்றல்; நால்வர் கைது.!

நுகர்வுக்குப் பொருத்தமற்ற பெருந்தொகையான சீனி கைப்பற்றல்; நால்வர் கைது.!

by Thinakaran
July 7, 2026
0

பேலியகொடை - பெதியாகொடை பகுதியில் நுகர்வுக்குப் பொருத்தமற்ற 4,250 தொன் சீனித் தொகையுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவலை, அங்கொடை, பிலியந்தலை...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த நீதியமைச்சர்.!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த நீதியமைச்சர்.!

by Mathavi
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்து, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்,...

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு.!

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு.!

by Mathavi
July 7, 2026
0

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் (03) இடம்பெற்றது....

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!

by Mathavi
July 7, 2026
0

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு பொலிஸார் காரில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தீவிர கற்கைநெறி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தீவிர கற்கைநெறி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
July 7, 2026
0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கான தீவிர கற்கைநெறி (Intensive Programme) நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று...

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; வெளியான அதிர்ச்சி தகவல்.!

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; வெளியான அதிர்ச்சி தகவல்.!

by Mathavi
July 7, 2026
0

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த...

பிந்திய செய்தி – நீர்கொழும்பு சிறையில் கொடூர கலவரம்; 25 பேர் உயிரிழப்பு.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை.!

by Mathavi
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல்...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி