உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் (03) இடம்பெற்றது.

மருதக் கலைஞர்களின் குடும்ப குதூகல நிகழ்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில், விழிப்புணர்வூட்டும் வகையிலான நாடகங்கள், கவிதைகள், பாடல்கள், அபிநயம் என நிகழ்வை மெருகூட்டின.

போதையால் மனிதன் படும் இன்னல்கள் மற்றும் வட்டி கலாசாரத்தால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றை வலியுறுத்தி, அதிலிருந்து மீளும் வகையிலான நாடகங்கள் நிகழ்வில் அரங்கேற்றப்பட்டு, அதிதிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.

எமது சமூகத்தை சீரழிக்கின்ற சமூக சீர்கேடுகளை எமது சமூகத்தில் இருந்து ஒழித்துக்கட்டும் நோக்கிலும் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டி அதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் வந்திருந்த அதிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட பலரது பாராட்டையும் பெற்றன.

இந்நிகழ்வில், மருதமுனையின் சிறந்த கலைஞரும் பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரருமான ஆரிப் ஆதம்பாவா டில்மானி பாறூக் கலைத்துறையில் ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்புக்காகவும், அவரது அயராத சேவைக்காகவும் மருதம் கலைக்கூடல் மன்றத்தினால் பொன்னாடைகள் போர்த்தியும் நினைவுச்சின்னங்கள் வழங்கியும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0