நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நேற்று திங்கட்கிழமை (06) ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும், அங்கு நிலவிய மோதல் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது.
இருப்பினும், எதிர்வரும் சில தினங்களுக்குள் அதிகாரிகள் குழு மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று, இச்சம்பவம் குறித்த முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கும் என ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.









